கிளௌகோமா என்பது கண் நிலைகளின் ஒரு குழு ஆகும், இதன் விளைவாக பார்வை நரம்பு சிதைவடைகிறது மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள சிறந்த கிளௌகோமா மருத்துவர்களுடன் இலவச பின்தொடர்தல்யை பதிவு செய்யவும்
கிளௌகோமா என்பது கண் நிலைகளின் ஒரு குழு ஆகும், இதன் விளைவாக பார்வை நரம்பு சிதைவடைகிறது மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள சிறந்த ... மேலும் வாசிக்க

Free Cab Facility

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

1-day Hospitalization

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA
Choose Your City
It help us to find the best doctors near you.
அவுரங்காபாத்
பெங்களூர்
சென்னை
கோயம்புத்தோர்
டெல்லி
ஹைதராபாத்
இந்தூர்
மதுரை
மும்பை
நாஷிக்
நொய்டா
பாட்னா
புனே
விஜயவாடா
டெல்லி
ஹைதராபாத்
புனே
மும்பை
பெங்களூர்
கண்ணின் ஆப்டிக் நரம்பு (கண்களை மூளையுடன் இணைக்கும் நரம்பு) பாதிக்கப்பட்டு, படிப்படியாக பார்வையை மோசமடையும் பொதுவான கண் நோய்தான் குளுக்கோமா. கண்ணின் உள்ளே திரவம் அதிகம் படிந்து கண்ணின் அழுத்தத்தை அதிகரிக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
குளுக்கோமாவிற்கு சரியான நேரத்தில் சிகிச்சை தேவைப்படுகிறது, இல்லையென்றால் நோயாளி பார்வை இழப்பால் பாதிக்கப்படலாம். குளுக்கோமா என்பது மெதுவாகத்தான் ஏற்ப்படும். எனவே, பார்வை மாறுவதை பலரால் சொல்ல முடியாது. ஆனால் நிலைமை மோசமாகும் போது, நோயாளி விஷயங்களை தெளிவாகப் பார்க்கத் தவறுகிறார். இந்த நிலைக்கு, சிகிச்சை அளிக்காவிட்டால், பார்வை இழப்பை விரைவாக உருவாக்கவும், நிரந்தர பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். மறுபுறம், சிகிச்சை அளித்தால் பார்வை இழப்பை மீட்டெடுக்கவும், பார்வை இழப்பு அல்லது தலைவலி போன்ற பிரச்சினைகளை நபர் எதிர்கொள்ளாமல் இருக்கவும் உதவும்.
Free தமிழ் -கிளௌகோமா அறுவை சிகிச்சை Cost Calculator
Fill details to get actual cost
பிரிஸ்டின் கேர் நிறுவனம் இந்தியாவில் best eye hospitals for glaucoma surgeryயுடன் தொடர்பில் உள்ளது. எங்களுடன் தொடர்பில் உள்ள அனைத்து கிளினிக்குகள் மற்றும் கண் மருத்துவமனைகள் நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளுடன் சுமூகமான அறுவை சிகிச்சை அனுபவத்தை உறுதி செய்கின்றன.
கூடுதலாக, பின்வரும் காரணிகள் குளுக்கோமா சிகிச்சைக்கு பிரிஸ்டின் கேர் ஒரு விரும்பத்தக்க மற்றும் நம்பத்தகுந்த சுகாதார நிறுவனம் என்ற பெயரை உருவாக்குகிறது:
பொதுவாக, கண் பரிசோதனையை தவறாமல் செய்தால் போதும். குளுக்கோமா நோயைக் கண்டறிந்து உறுதி செய்து கொள்ளலாம். இருப்பினும், ஒரு துல்லியமான நோயறிதலுக்கு, கண் மருத்துவர் பின்வரும் பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்-
இந்த நோய் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளின் முடிவுகளைப் பொறுத்து, மருத்துவர் நோயாளிக்கு சிறந்த குளுக்கோமா சிகிச்சை முறையைப் பரிந்துரைப்பார்.
குளுக்கோமா, ஒரு முறை உருவானால், அதை குணப்படுத்தவோ, பழையபடி மாற்றவோ முடியாது. ஆனால் பல்வேறு சிகிச்சைகளைப் பயன்படுத்தி கண் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இந்த நிலை அதிகரிப்பாதைக் கட்டுப்படுத்தலாம். நோயின் தீவிரத்தை முழுமையாகக் கண்டறிந்து, அதன் தீவிரத்தை மதிப்பீடு செய்த பின்னரே சிறந்த சிகிச்சை முறை எது என்று பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. சிகிச்சை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
குளுக்கோமாவுக்கு ஆரம்ப சிகிச்சை கண் சொட்டு மருந்தை பரிந்துரைப்பதாகும். குளுக்கோமாவிற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் கண் சொட்டு மருந்துகள்:
குளுக்கோமாவிற்கான மற்ற கண் சொட்டு மருந்துகளில் கார்பனிக் அன்ஹைட்ரேஸ் தடுப்பான்கள், ரோ கைனேஸ் தடுப்பான்கள் மற்றும் மியோடிக் ஏஜெண்டுகள் ஆகியவை அடங்கும், இவை மிகவும் நன்மை பயக்கும்.
குளுக்கோமா சிகிச்சைக்கான மருந்துகளில் லாடானோப்ரோஸ்ட் (சலட்டான்), டிராவோப்ரோஸ்ட் (டிராவாடான் இசட்), லாடானோப்ரோஸ்டீன் புனோட் (வைசுல்டா), டாப்லோப்ரோஸ்ட் (சியோப்டான்), மற்றும் பிமாட்டோப்ரோஸ்ட் (லுமிகன்) ஆகியவை அடங்கும்.
குளுக்கோமா சிகிச்சைக்கு பல்வேறு அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன:
குளுக்கோமாவிற்கான லேசர் அறுவை சிகிச்சை-கண் சொட்டு மருந்தை பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது மருந்துகளின் மூலம் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. குளுக்கோமாவிற்கான லேசர் அறுவை சிகிச்சைக்கான வெவ்வேறு அணுகுமுறைகள்:
வடிகால் சாதனம்- இந்த நுட்பம் கண்ணிலிருந்து கண்ணின் திரவத்தை வெளியேற்ற உதவும் ஒரு கருவியை வைப்பதை உட்படுத்துகிறது. இம்ப்ளான்ட் கருவி ஸ்க்லீராவிற்கு தைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் குழாய் திரவம் வடிய ஏதுவாக கண்ணின் முன்புற அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வடிகட்டுதல் அறுவைசிகிச்சை – இது ட்ராபெகுலெக்டமி என்றும் அழைக்கப்படுகிறது, இந்த செயல்முறை ஸ்க்லீராவில் (கண்ணின் வெள்ளை பகுதி) ஒரு திறப்பை உருவாக்குகிறது. அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறி, உடலால் உறிஞ்சப்படுகிறது.
குறைந்தபட்ச ஊடுருவல் கிளாக்கோமா அறுவை சிகிச்சை (எம்ஐஜிஎஸ்) – அப்-இன்டர்னல் கானலோபிளாஸ்டி (ஏபிஐசி) என்றும் அழைக்கப்படுகிறது, இந்த நுட்பம் கண் திரவங்களுக்கான இயற்கையான வெளியேற்ற அமைப்பை மீட்டெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. கண்ணின் அழுத்தத்தைக் குறைக்க கண்ணின் வடிகால் அமைப்பைப் பெரிதாக்கும் ஒரு மைக்ரோகேதிட்டர் பயன்படுத்தப்படுகிறது. செயல்முறையில் பயன்படுத்தப்படும் மைக்ரோகேத்திட்டர் முக்கியமாக வடிகால் கால்வாயில் பாதுகாப்பாக நுழைய வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்டெரைல் விஸ்கோஎலாஸ்டிக் ஜெல் கால்வாயில் செலுத்தப்பட்டு, அதன் அசல் அளவை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வரை விரிவடையச் செய்யப்படுகிறது. இது நீர்த்த திரவத்தை சரியாக வடிய அனுமதிக்கிறது.
Diet & Lifestyle Consultation
Post-Surgery Recovery Follow up
Free Cab Facility
24*7 Patient Support
கண்களில் உள்ள இன்ட்ராகுலர் பிரஷரை குறைப்பதே குளுக்கோமா அறுவை சிகிச்சையின் நோக்கம். குளுக்கோமா அறுவை சிகிச்சைக்கு முன்னேறப்படுகள் எதுவும் தேவையில்லை என்றாலும், அறுவை சிகிச்சைக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வது எப்போதும் சிறந்தது, உங்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கிளௌகோமா அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைதல் பொதுவாக வலியில்லாதது மற்றும் எளிமையானது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பெரும்பாலான குணமடைதல் அறுவை சிகிச்சையின் நடைமுறை மற்றும் குணமடையும் காலத்தின் மீதான உங்கள் எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது.
அறுவை சிகிச்சை செய்த உடனேயே நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்களில் பார்வை மங்குவது சாதாரணம். குளுக்கோமா அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் பிற தற்காலிக பக்க விளைவுகள்:
இந்த பக்கவிளைவுகள் பெரியவை அல்ல, மேலும் மருந்துகள் மற்றும் கண் சொட்டு மருந்துகளால் இவை குறைய வாய்ப்புள்ளது.
குளுக்கோமா அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு குறிப்பிடத்தக்க வலி ஏதும் ஏற்படுவதில்லை. என்றாலும், உங்கள் கண்களில் வலி ஏற்பட்டால், அதை நீக்க சிறந்த வழிகளைப் பற்றி உங்கள் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
குளுக்கோமா அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைதல் என்பது அந்தந்த நபரைச் சார்ந்தது. குறைந்த அளவு ஊடுருவல் அறுவை சிகிச்சைகள் விஷயத்தில் பார்வை மீட்பு மிகவும் குறைவு. பொதுவாக, குணமாகும் காலம் ஒரு சில நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இருக்கலாம். பெரும்பாலான மக்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களிலேயே வாசிப்பது, டிவி பார்ப்பது அல்லது தொலைபேசி, கம்ப்யூட்டர் அல்லது பிற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். கண் பாதுகாப்பு (ஒரு ஷீல்டு அல்லது கண்ணாடி) அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில நாட்களுக்கு கண்ணில் ஏதாவது இடித்தல் அல்லது தேய்ப்பதைத் தடுக்கிறது.
குளுக்கோமா அறுவை சிகிச்சைக்குப் பின் ஓரிரு நாட்களுக்கு கீழ்க்கண்டவற்றைத் தவிர்க்கவும்:
மேம்பட்ட குளுக்கோமா கேஸ்களுக்கு அறுவை சிகிச்சை தலையீடு என்று வரும்போது, நன்மைகள் பொதுவாக அபாயங்களை விட அதிகமாக உள்ளன. இருப்பினும், குளுக்கோமா அறுவை சிகிச்சையில் உள்ள சில அரிதான ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
குளுக்கோமாவை நிரந்தரமாக குணப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகள் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், ஆரம்பத்திலேயே நோய் கண்டறியப்பட்டால் பார்வையைப் பாதுகாக்க கண் மருத்துவர்கள் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.
குளுக்கோமாவுக்கு பயன்படுத்தப்படும் கண் சொட்டு மருந்து கண் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் நிலைமையை நிர்வகிக்க உதவுகிறது. இந்த கண் சொட்டு மருந்து கண் அழுத்தத்தை தடுத்து ஆப்டிக் நரம்புகள் பாதிக்கப்படுவதை தடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. அவை குளுக்கோமா அல்லது தலைகீழ் பார்வை இழப்பிற்கு நிவாரணமாக இருக்காது.
குளுக்கோமாவை குணப்படுத்த முடியாது, ஆனால் இந்த நிலை அதிகமாவதைத் தடுக்கலாம். இது பொதுவாக மெதுவாக வளர்கிறது, மேலும் சிகிச்சை செய்யப்படாத ஆரம்பகால குளுக்கோமா பார்வையிழப்பாக மாற 15 ஆண்டுகள் எடுக்கலாம்.
சராசரியாக, குளுக்கோமா ஆரம்ப நிலை சேதத்திலிருந்து முழுக் குருட்டுத்தன்மைக்கு முன்னேற சுமார் 10-15 ஆண்டுகள் எடுக்கும். ஆரம்ப ஆண்டுகளில் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் மூலம் இந்த நிலையை நிர்வகிக்க முடியும், ஆனால் நிலைமை மோசமடைந்தவுடன், இந்த சிகிச்சையே கடைசி பயனுள்ள சிகிச்சையாக இருக்க வாய்ப்புள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு 6 வாரங்கள் வரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்கள் மங்கலாகத் தெரியலாம். இது விலகிச் செல்லும்போது, உங்கள் பார்வை பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்கு முன்பு இருந்ததைப் போலவே நன்றாக இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, இல்லை. குளுக்கோமாவால் பறிபோன எந்தவொரு பார்வையையும் தற்போதைய மருத்துவ முன்னேற்றங்களால் மீட்டெடுக்க முடியாது.
Shivangi
Recommends
The doctor handled my eye condition carefully and explained everything clearly
Hardhik Raina
Eye pressure controlled well thanks to staff and doctor
Anuj
Recommends
Eye pressure was controlled effectively, doctors was knowledgeable and experienced
Anthrayase
Recommends
We are highly impressed and satisfied. Also decided to visit as and when required for further consultations.
sarala
Recommends
Thanks to Pristyn care for the treatment, my eyes are now normal.
Vinod bhardwaj
Recommends
My Experience was very nice , doctor and staff all are supportive , very satisfied