location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Appointment

இந்தியாவில் அறுவை சிகிச்சை கருக்கலைப்பு

கருக்கலைப்பு செய்ய வேண்டுமா? பாதுகாப்பான மற்றும் ரகசியமான அறுவை சிகிச்சை கருக்கலைப்பு செய்ய எங்கள் நிபுணத்துவம் பெற்ற பெண் மகளிர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இலவச பின்தொடர்தல்!

கருக்கலைப்பு செய்ய வேண்டுமா? பாதுகாப்பான மற்றும் ரகசியமான அறுவை சிகிச்சை கருக்கலைப்பு செய்ய எங்கள் நிபுணத்துவம் பெற்ற பெண் மகளிர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். இலவச பின்தொடர்தல்!

anup_soni_banner
தேவையற்ற கர்ப்பத்திலிருந்து விடுபடுங்கள்
cost calculator
Gynecologist image
i
i
i
i
Call Us
Call icon
We are Rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

பெங்களூர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

கொல்கத்தா

மதுரை

மும்பை

புனே

திருவனந்தபுரம்

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

  • online dot green
    Dr. Rahul Manchanda - Abortion Treatment Specialist in Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi, over 32  Years Experience

    Dr. Rahul Manchanda

    MBBS, MD-Obs & Gynae
    32 Yrs.Exp.

    4.5/5

    32 Years Experience

    location icon Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi
    Call Us
    080-6962-5907
  • online dot green
    Dr. Nidhi Moda - Abortion Treatment Specialist in Pristyn Care Sheetla, New Railway Rd, Gurugram, over 24  Years Experience

    Dr. Nidhi Moda

    MBBS, MD-Obs & Gynae
    24 Yrs.Exp.

    4.9/5

    24 Years Experience

    location icon Pristyn Care Sheetla, New Railway Rd, Gurugram
    Call Us
    080-6542-3711
  • online dot green
    Dr. Neeru Gupta - Abortion Treatment Specialist in Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon, over 17  Years Experience

    Dr. Neeru Gupta

    MBBS, DGO
    17 Yrs.Exp.

    4.5/5

    17 Years Experience

    location icon Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon
    Call Us
    080-6542-3711
  • online dot green
    Dr. Ratnaboli Bhattacharya - Abortion Treatment Specialist in Pristyn Care Ferticity, 12, Navjeevan Vihar, Geetanjali Enclave, Malviya Nagar, New Delhi, Delhi 110017, over 16  Years Experience

    Dr. Ratnaboli Bhattachar...

    MBBS, MS-Obs&Gynae, DNB-Obs&Gynae
    16 Yrs.Exp.

    4.5/5

    16 Years Experience

    location icon Pristyn Care Ferticity, 12, Navjeevan Vihar, Geetanjali Enclave, Malviya Nagar, New Delhi, Delhi 110017
    Call Us
    080-6542-3524

அறுவைசிகிச்சை கருக்கலைப்பு என்றால் என்ன?

அறுவைசிகிச்சை கருக்கலைப்பு என்பது ஒரு மருத்துவ ப்ரொசீஜர் ஆகும். அறுவைசிகிச்சை கருக்கலைப்பு கர்ப்பத்தை (கருப்பையில் உள்ள கருவின் உள்ளடக்கங்கள்) அறுவை சிகிச்சை மூலம் நீக்குகிறது. அறுவைசிகிச்சை கருக்கலைப்பு கர்ப்பத்தை கலைக்க விரும்பும் எவருக்கும் ஒரு நல்ல தேர்வு பாதுகாப்பான மருத்துவ அல்லது மருத்துவமனை அமைப்பு ஆகும். அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்து, தாயின் கருப்பையில் இருந்து கருவையும், பிளாசென்டாவையும் அகற்றுகின்றனர்.

அறுவைசிகிச்சை கருக்கலைப்பு, ‘சக்ஷன் அஸ்பிரேஷன் கருக்கலைப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாள் செயல்முறை ஆகும், இது ஒரு கிளினிக் அல்லது மருத்துவமனையில் லோக்கல் அனெஸ்தீஸியாவின் கீழ் செய்யப்படுகிறது. அறுவைசிகிச்சை கருக்கலைப்பு என்பது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அல்லது கருக்கலைப்பு மாத்திரைகளால் கர்ப்பத்தை கலைக்க முடியாத பெண்களுக்கு ஒரு சாத்தியமான சிகிச்சையாகும். இந்தியாவில் எம்டிபி சட்டம் 24வது வாரம் வரை மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கிறது.

cost calculator

Free கருக்கலைப்பு Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

பாதுகாப்பான கருக்கலைப்புக்கான சிறந்த சுகாதார மையம்

பிரிஸ்டின் கேர் பாதுகாப்பான அறுவை சிகிச்சை கருக்கலைப்புக்கு பதிவு செய்யப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற சுகாதார மையம் ஆகும். பல ஆண்டுகளாக, பிரிஸ்டின் கேர் அபரிமிதமான நம்பிக்கையைக் கொண்டுள்ளது, மற்றும் பாதுகாப்பான, மலிவு மற்றும் சட்டபூர்வமான அறுவை சிகிச்சை கருக்கலைப்பு சேவைகளை வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நம்பிக்கை பெற்றுள்ளது. சுகாதார மையத்தின் நல்லெண்ணம் மற்றும் அனைத்து நெறிமுறைகளுடன் அறுவைசிகிச்சை கருக்கலைப்பு செய்யும் மகளிர் நல மருத்துவர்களின் நற்பெயரால், பிரிஸ்டின் கேர் கருக்கலைப்புக்கான இந்தியாவின் உயர்ந்த சுகாதார மையங்களில் ஒன்றாக மாறுகிறது.

பிரிஸ்டின் கேரில் அனைத்து அறுவை சிகிச்சை கருக்கலைப்புகளும் எம்டிபி சட்டம், 1971 இல் புதிய திருத்தத்திற்கு உட்பட்டு செய்யப்படுகின்றன. பிரிஸ்டின் கேர் மகளிர் மருத்துவ நிபுணர் கருக்கலைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு நோயாளிக்கும் ஆலோசனையும் வழங்குகிறார்கள், செயல்முறையின் மூலம் அவர்களை முழுமையாக வழி நடத்துகிறார்கள் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை கருக்கலைப்பு செய்யும் போது வெளிப்படைத்தன்மை, பரிவோடு மற்றும் நியாயத்தன்மையை மிக முக்கியமான கொள்கைகளாகப் பின்பற்றுகிறார்கள்.

கருக்கலைப்பு அறுவைசிகிச்சைக்கான மிகவும் விரும்பப்படும் கிளினிக்காக பிரிஸ்டின் கேரை உருவாக்கும் சில அம்சங்கள்:

  • பாதுகாப்பான, சட்டரீதியான மற்றும் வலியில்லாத கருக்கலைப்பு
  • அதிக அனுபவம் பெற்ற மகளிர் மகபேறு மருத்துவர்
  • கருக்கலைப்புக்கான ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் கிளினிக்குகள்
  • மிகவும் ரகசியமான தன்மைக்கு உத்தரவாதம்
  • செயல்முறையின் போதும் அதற்குப் பின்னரும் தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல்

அறுவைசிகிச்சை கருக்கலைப்பில் என்ன நடக்கிறது?

பொதுவாக அறுவை சிகிச்சை கருக்கலைப்பு என்பது ஒரு சிறிய அறுவை சிகிச்சை. கருவுற்றிருக்கும் காலத்தைப் பொறுத்து, பின்வரும் வகையான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன:

வாக்யூம் ஆஷ்பிரேஷன்

  • கர்ப்பத்தின் 14 வாரங்கள் வரை வாக்யூம் ஆஸ்பிரேஷன் செய்யப்படுகிறது.
  • இந்த அறுவை சிகிச்சை லோக்கல் அல்லது ஜெனரல் அனஸ்தீஸியா கீழ் செய்யப்படுகிறது.
  • இந்த செயல்முறையானது கருப்பை வாய் வழியாக கரு அல்லது கருவை பிரிக்கவும் அகற்றவும் ஒரு வாக்யூம் சோர்ஸ்யை உள்ளடக்கியது.
  • ஒரு பம்புடன் இணைக்கப்பட்ட மெல்லிய கனுலா கருப்பைக்குள் செலுத்தப்படுகிறது. பம்பை ஆன் செய்தவுடன், கருப்பைச் சுவரில் இருந்து கருவின் திசுக்கள் மெதுவாக அகற்றப்படும்.

டிலேஷன் , கியூரெட்டேஜ்

  • டிலேஷன் & க்யூரெட்டேஜ் என்பது ஒரு விரைவான, பிளேடு இல்லாத, வலியற்ற, மற்றும் அதே நாள் வெளியேற்றத்துடன் முழுமையான வெளியேற்றத்தை உறுதி செய்கிறது.
  • முதலில், கருப்பை வாய் விரிவடைவதற்கான மருந்தை மருத்துவர் கொடுக்கிறார். இது பிறப்புக் கால்வாயை விட்டு வெளியேறுவதற்கு கர்ப்பத் திசுக்களுக்கு மிகவும் முக்கியமானது. இதற்கு 30-40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். வாய் விரிவடைந்தவுடன், அறுவை சிகிச்சை நிபுணர் கருப்பையிலிருந்து அனைத்து கர்ப்ப திசுக்களையும் அகற்றுவதற்கு ஒரு கூரேடேஜ் கருவியைப் பயன்படுத்துகிறார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, கருப்பை வாய் இயற்கையாகவே சுருங்கி, எந்த வெட்டோ அல்லது தையலோ இல்லாமல் கர்ப்பம் முடிவடைகிறது.

இண்டக்ஷன் கருக்கலைப்பு

  • இந்த செயல்முறையின் போது, மருத்துவர் உங்களுக்கு மருந்து கொடுக்கிறார், அது உங்களை பிரசவத்திற்கு உட்படுத்துகிறது, இதனால் கர்ப்பத்தை வெளியிட கருப்பை சுருங்குகிறது.
  • மருத்துவர் கருப்பையை சுத்தம் செய்ய சக்சனை பயன்படுத்தலாம். அறுவை சிகிச்சைக்கு அதிக நேரம் எடுக்கலாம் என்பதால் நீங்கள் ஒரு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கலாம்.
  • நீங்கள் தடிப்பு மற்றும் கடுமையான வலியை உணர்ந்தால், அசௌகரியத்தைத் தடுக்க மருத்துவர் சில தூக்க மாத்திரைகளை பரிந்துரைக்கலாம்.

அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்கு எப்படி தயாராவது?

உங்கள் அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்கு முன், உங்கள் மகளிர் மருத்துவர் நிபுணர் ஆலோசனையின் போது ப்ரொசீஜரைப் பற்றிய அனைத்தையும் உங்களுக்கு விளக்க வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் கர்ப்பத்தின் நிலையைப் பகுப்பாய்வு செய்த பிறகு, கருக்கலைப்புக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்த சில வழிமுறைகளையும் மருத்துவர் உங்களுக்கு வழங்கலாம்.

உங்களுடைய அறுவைசிகிச்சை கருக்கலைப்பு நாளுக்குத் தயாராகும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு:.

  • மருத்துவர் பரிந்துரைத்தபடி, உங்கள் மருந்துகளை (விரிவாக்கும் மருந்துகள், வலி ​​நிவாரணி அல்லது வேறு ஏதேனும் வழக்கமான மருந்துகள்) எடுத்துக்கொள்வது
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களை வீட்டிற்கு வாகனத்தில் ஓட்டக்கொண்டு போகக் கூடிய ஒருவருக்காக ஏற்பாடு செய்வது, ஏனெனில் நீங்கள் வாகனம் ஓட்ட அறிவுறுத்தப்பட மாட்டீர்கள்
  • பின்பற்றுகிற
  • மது மற்றும் புகையிலை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது
  • மருத்துவர் சொன்னவற்றை தவிர வேறு எதையதையும் சாப்பிடுவதையோ குடிப்பதையோ உங்கள் அறுவை சிகிச்சை நாளில் தவிர்ப்பது
  • அறுவை சிகிச்சைக்கு பின் உங்களுக்கு ரத்தம் வர வாய்ப்பு உள்ளதால் சில சானிட்டரி பேட்களை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்
  • அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் தொந்தரவிலிருந்தும், வலியிலிருந்தும் விடுபட ஹீட்டிங் பேட் அல்லது வெந்நீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும்
  • அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பு கிளினிக் அல்லது மருத்துவமனையில் இருக்க வேண்டும்

கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, கருக்கலைப்புக்கு மனதளவில் நீங்கள் தயாராக இருங்கள். இலகுவாக எடுத்துக் கொள்வது முக்கியம்!

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Recovery Follow up

FREE Cab Facility

24*7 Patient Support

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன எதிர்பார்க்கலாம்?

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிலைமை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்டது, ஒருவர் ஓரிரு நாட்களுக்குள் அன்றாட வேலைக்குத் திரும்பலாம், மற்றவர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம்.

  • அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்குப் பிறகு 2-4 நாட்களுக்கு நீடிக்கக்கூடிய கடுமையான பிடிப்புகளை நீங்கள் அனுபவிக்கலாம். சில பெண்களுக்கு 7-10 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக இந்த பிடிப்புகள் இருக்கும்.
  • பல பெண்களுக்கு வயிற்றுப் பிடிப்புடன் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு ஏற்படும். சிலருக்கு, இரத்தக் கசிவு குறைவாக இருக்கலாம், சிலருக்கு, இரத்தக் கசிவு அதிகமாக இருக்கலாம் மற்றும் இரத்த உறைவுகளும் இதில் அடங்கும். ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் இரத்தக் கசிவு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சானிட்டரி பேட்களை நனைந்தால், தாமதிக்காமல் உங்கள் மகளிர் நல மருத்துவரை அணுகவும்.
  • உங்கள் வலியை குறைக்க, உங்கள் பெண்னோயாளி ஓவர்-தி-கவுண்டர் (ஓடிசி) வலி நிவாரணிகள் அல்லது ஆன்டிபயாடிக்களை பரிந்துரைப்பார்.
  • இயல்பு நிலைக்கு வர ஓரிரு மாதங்கள் ஆகலாம்.
  • அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் சிறிதளவு உள்ளது, எனவே மீண்டும் அதை மீண்டும் தொடங்குவது பரவாயில்லை என்று மருத்துவர் கூறும் வரை உடலுறவில் இருந்து விலகி இருக்குமாறு உங்களைக் கேட்கலாம்.
  • நீங்கள் மன நிலை மாற்றம், மன அழுத்தம், குமட்டல், சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை அனுபவிக்கலாம்
  • குளிப்பது எப்படி (குளியல் பொதுவாக அறிவுறுத்தப்படுவதில்லை) மற்றும் நீங்கள் செய்யக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டியவை ஆகியவை உங்களுக்கு வழிகாட்டப்படும்.

அறுவை சிகிச்சை கருக்கலைப்புக்குப் பிறகு மீட்பு

கருக்கலைப்பைத் தொடர்ந்து வரும் நாட்களில், ஒரு பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து சோர்வாக உணரலாம். எனவே, கருச்சிதைவுக்குப் பின் உடல் மற்றும் மன ரீதியான பராமரிப்பு அவசியம்.

(உடல் பராமரிப்பு)

  • ப்ரொசீஜர்க்கு பிறகு உங்களை கவனித்துக்கொள்ள ஒருவரை (நண்பர் அல்லது குடும்ப நபர்) வைத்துக்கொள்ளுங்கள். எந்த கடினமான வேலையிலும் ஈடுபட வேண்டாம்.
  • வயிற்றுப் பிடிப்புகள் குறைய இதை முயற்சி செய்யுங்கள்:
  • ஹீட்டிங் பேட் பயன்படுத்துங்கள்
  • வயிறு மற்றும் கீழ் முதுகில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • வலியைப் போக்க ஓவர் தி கவுண்டர் மாத்திரைகள் (மருத்துவரின் ஆலோசனையை முன்னரே பெறுங்கள்)
  • நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த தொடர் ஆலோசனைகளில் கலந்து கொள்ளுங்கள்

(எமோஷனல் கேர்)

கருக்கலைப்பு செய்து கொண்ட பின்னர், ஒருவரின் புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் படிப்படியாக குறைந்து, குறைந்த மனநிலையை ஏற்படுத்தும். கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் கவலை, மன அழுத்தம், தூக்கக் கோளாறுகள் போன்றவை பொதுவான மனப் பிரச்னைகள்.

உணர்ச்சிப்பூர்வ மாற்றங்களுக்கு ஏற்ப நிம்மதியாக இருக்க, போதுமான அளவு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பேசுங்கள். அந்த உணர்வை உங்களுக்குள் மட்டுமே கொண்டு செல்லாதீர்கள்.

அறுவைசிகிச்சை மூலம் கருக்கலைப்பிற்குப் பின் குணமடைவது கடினமல்ல, ஆனால் அது சுலபமானதும் அல்ல. ஆனால், அது ஆளுக்கு ஆள் மாறுபடும். தாமதமான கருக்கலைப்புகளுக்கு மீட்பு நீண்ட நேரம் எடுக்கலாம். சிக்கல்கள் தோன்றினால், குணமடைவதற்கு பல வாரங்கள் ஆகலாம்.

இந்தியாவில் யாருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம்?

இந்திய கருக்கலைப்புச் சட்டத்தின்படி, பின்வரும் சூழ்னிலைகளின் கீழ் பெண் கர்ப்பத்தின் 20 வாரங்களில் இருக்கும் வரை கருக்கலைப்பு அனுமதிக்கத்தக்கதாக தீர்மானிக்கப்படுகிறது:

  • கர்ப்பத்தைத் தொடர்வது அந்தப் பெண்ணுக்கு உடல்னலக் கவலையாக இருக்கலாம் அல்லது அவளுக்கு அல்லது குழந்தைக்கு உடல் அல்லது மன ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
  • பிறக்கும் குழந்தை கடுமையாக ஊனமடையக் கூடிய கருவின் அசாதாரண வளர்ச்சி.
  • கற்பழிப்பு அல்லது பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பம்.
  • கருத்தடை முறைகள் தோல்வியால் கர்ப்பம்

அறுவை சிகிச்சை கருக்கலைப்பு அல்லது கிளினிக் உள்ள கருக்கலைப்பு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் உரிமம் பெற்ற கிளினிக்கில் அனுமதிக்கப்படுகிறது:

  • திட்டமிடாத கர்ப்பம்
  • ஏற்கனவே ஒரு முழுமையான குடும்பம்
  • பெற்றோர் (கள்) ஒரு குழந்தையை வளர்க்க முடியாது
  • தாயின் உடல் நலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதால், கர்ப்பம் சிக்கலாகிவிடும்
  • கருவில் பிரச்னை (அசாதாரண வளர்ச்சி) உள்ளது
  • பாலியல் வன்கொடுமையின் விளைவாக கருவுறுதல்
  • ஒரு குழந்தையை வளர்க்க மனதளவில் தயாராக இல்லை
  • கருத்தடை முறைகளின் தோல்வி

அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்ன?

மருத்துவ அறிக்கைகளின்படி, 98 சதவீதத்திற்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் அறுவைசிகிச்சை கருக்கலைப்பு வெற்றியடைகிறது. அறுவைசிகிச்சை கருக்கலைப்பின் நன்மைகள் பின்வருமாறு:

  • மருந்து கருக்கலைப்பை விட அறுவை சிகிச்சை கருக்கலைப்பு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
    இந்த செயல்முறை மருந்துகளுடன் ஒரு கர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதைக் காட்டிலும் குறைந்த தோல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • மருந்து கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் கர்ப்ப காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு பின்னர் செய்யப்படலாம்.
  • இந்த அறுவை சிகிச்சை ஒரே நாளில் செய்யப்படுகிறது, அதே நாளில் பெண் வீடு திரும்பலாம்.
  • மருத்துவ கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் இரத்தப்போக்கு மற்றும் கட்டியின் தீவிரம் மிகவும் குறைவு.
  • அறுவைசிகிச்சை கருக்கலைப்பு குறைந்த இரத்தப்போக்கை உள்ளடக்கியது, எனவே இரத்த சோகை (இரும்பு குறைபாடு) கொண்ட பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சாத்தியமான சிகிச்சை முறையாக கருதப்படுகிறது.
  • அறுவைசிகிச்சை மூலம் கருக்கலைப்புக்குப் பிறகு குணமடைவது மிகவும் வேகமாக இருக்கிறது பெரும்பாலான பெண்கள் தங்களுடைய அன்றாட வேலைகளுக்கு ஓரிரு நாட்களில் திரும்பிவிடுகிறார்கள்

அறுவைசிகிச்சை கருக்கலைப்பின் தீமைகள் மருத்துவ கருக்கலைப்பின் தீமைகளை விட மிகவும் குறைவானவை, அவற்றில் சில:

  • மருத்துவ கருக்கலைப்பை விட அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் கருக்கலைப்பு அதிக செலவு அதிகம் ஆகும்.
  • அனுபவம் வாய்ந்த மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால், அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பான அறுவை சிகிச்சை கருக்கலைப்புக்கான கிளினிக்கை தேர்ந்தெடுப்பது எப்படி?

பாதுகாப்பான அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்கு, முதல் மற்றும் மிக முக்கியமான விஷயம் கருக்கலைப்புக்கு பாதுகாப்பான மற்றும் உரிமம் பெற்ற கிளினிக்கை தேர்ந்தெடுப்பது ஆகும். ஒரு கிளினிக் பின்வரும் மருத்துவ, நன்னெறி மற்றும் சமூக அடிப்படைகளுக்கு இணங்குகிறது என்றால் கருக்கலைப்பு பாதுகாப்பான கருதப்படுகிறது:

மருத்துவ காரணங்கள்:

மருத்துவ அடிப்படையில், கருக்கலைப்பு பாதுகாப்பானதாகக் கருதப்பட:

  • பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த சுகாதார வழங்குனர்களால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது.
  • கருக்கலைப்பு செய்யப்படும் கிளினிக், நிலையான அறுவை சிகிச்சை நடைமுறைகளைப் பின்பற்றுகிறது.
  • இந்த கிளினிக் இந்தியாவின் எம்டிபி சட்டத்தின் கீழ் கருக்கலைப்புக்கு உரிமம் பெற்றுள்ளது, மேலும் கருக்கலைப்பு செய்ய மகளிர் நல மருத்துவர்கள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
  • மருத்துவர்களும், ஊழியர்களும் நன்கு பயிற்சி பெற்று, பல முறை பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.

ஒழுக்கநெறி அடிப்படைகள்

தார்மீக அடிப்படையில், கருக்கலைப்பு பாதுகாப்பானது என்று கருதப்பட

  • மருத்துவமனையும், மருத்துவர்களும் நோயாளிகளின் ரகசியத்தைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளனர்.
  • கிளினிக்கின் மருத்துவரால் எந்த விதமான பாகுபாடும் காட்டப்படுவதில்லை.
  • ஒவ்வொரு பெண்ணின் இனப்பெருக்க உரிமை கிளினிக்கின் மருத்துவ பயிற்சியாளர்களால் கருத்தில் கொள்ளப்படுகிறது.
  • கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் பாலின அடிப்படையில் கருக்கலைப்புகளை செய்வதில்லை.
  • பெண்களின் உடல், மன மற்றும் உணர்வு ரீதியான நலனை இந்த குழு கருத்தில் கொள்கிறது.

மேற்கூறிய அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் ஒரு சான்றளிக்கப்பட்ட சுகாதார மையம் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்துகொள்ள உகந்தது என்று கருதப்படலாம். குறுகிய கால நடைமுறை என்றாலும், பாதுகாப்பாக நடத்தப்படாவிட்டால், அது பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் மற்றும் அவரது எதிர்கால கர்ப்பத்தையும் பாதிக்கும். எனவே, கருக்கலைப்புக்கு பாதுகாப்பான கிளினிக்கைத் தேர்ந்தெடுப்பது என்பது இந்த செயல்முறைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் மிக முக்கியம்.

இந்தியாவில் திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு - எம்டிபி சட்டம் என்ன சொல்கிறது?

மருத்துவ கருக்கலைப்புச் சட்டம்(மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் பிரெக்னன்சி) 1971-ன் படி, கருவுற்ற 9 வாரங்கள் வரை மருத்துவ கருக்கலைப்பும், 20 வாரங்கள் வரை அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவக் கருக்கலைப்பு (திருத்த) மசோதா 2020, ஒரு பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள கால அளவை அதிகரித்ததோடு, அறுவை சிகிச்சை செயல்முறையை மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகளையும் ஒழுங்குபடுத்தியது. MTP சட்டம், 1971, கருக்கலைப்பு செய்து 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்தால் ஒரு மருத்துவரின் கருத்தையும், 12-20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரண்டு மருத்துவர்களின் கருத்தையும் கோரியது, திருத்தப்பட்ட மசோதா, 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்தால் ஒரு மருத்துவரின் ஆலோசனையை அனுமதிக்கிறது. கர்ப்பத்தின் 20-24 வாரங்களுக்கு இடையில் சில கேஸ்களில் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனையை அனுமதிக்கிறது.

திருமணமாகாத பெண்களுக்கும் சட்டப்படி கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு என்பதையும் இந்த சட்டத்திருத்தம் அங்கீகரிக்கிறது.

திருமணமாகாத இந்திய பெண்கள் மருத்துவக் கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்படி உரிமை உண்டு. ஆனாலும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அவர்களின் பாதுகாவலரின் ஒப்புதல் தேவை. திருமணமாகாத பெண்கள் பின்வரும் சூழ்நிலைகளின் கீழ் கர்ப்பத்தை சட்டப்பூர்வமாக கலைக்க கோரலாம்.

  • கற்பழிப்பு போன்ற பாலியல் தாக்குதலின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டால்.
  • கர்ப்பம் தரித்திருப்பது தாயின் அல்லது குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால்.
  • குழந்தை பிறந்த பிறகு உடல் ரீதியான அசாதாரணங்கள் உருவாக்க வாய்ப்பு இருந்தால்.
  • கருத்தடை செயலிழப்பின் விளைவாக கருத்தரித்திருந்தால்

பெண் திருமணமாகாதவராகவும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருந்தால், மருத்துவரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மட்டுமே தேவை. திருமணமாகாத பெண் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு காப்பாளரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் தேவை.

இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்வதற்கான செலவு எவ்வளவு?

அறுவைசிகிச்சை மூலம் கருக்கலைப்புக்கான செலவு நாடு முழுவதும் வேறுபடுகிறது. பொதுவாக, ஒரு அறுவை சிகிச்சை கருக்கலைப்புக்கு 10,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவாகும். இந்த செலவு பொதுவாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் (தேவைப்பட்டால்) மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புக்கான கட்டணங்களையும் உள்ளடக்கியது. அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகையானது பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடலாம்:

  • மகளிர் நல மருத்துவரின் ஆலோசனை கட்டணம்
  • மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறையின் வகை -டி&இ அல்லது வேக்கம் ஆஸ்பிரேஷன்
  • அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர்களின் கட்டணங்கள்
  • கர்ப்ப காலம்
  • நோயாளியின் மருத்துவ வரலாறு
  • அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்யப்படும் நோயறிதல் பரிசோதனைகள்
  • அறுவைசிகிச்சைக்கு நகரத்தின் தேர்வு

பிரிஸ்டின்கேரில் best Female Gynecologistகளிடம் கலந்து ஆலோசித்து அறுவைசிகிச்சை கருக்கலைப்பின் செலவு மதிப்பீடு பெறவும்.

கருக்கலைப்பைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்வது வலிநிறைந்ததா?

கருச்சிதைவு சில வலியையும் தசை பிடிப்பையும் ஏற்படுத்தலாம் ஆனால் இந்த அசௌகரியங்கள் தாங்கிக்கொளும் படியாகவே இருக்கும். இருப்பினும், கருக்கலைப்பு அனுபவம் வெவ்வேறு நபர்களுக்கு மாறுபடுகிறது. ஒரு நபர் அனுபவிக்கும் வலி மற்றும் பிற பக்க விளைவுகளின் அளவு செய்யப்படும் கருக்கலைப்பு வகை மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தது. ஒரு மருத்துவ கருச்சிதைவில், பெண்கள் அந்த அனுபவத்தை அதிகப்படியான மாதவிடாய் மற்றும் தசை பிடிப்புகளைக் கொண்டிருப்பதற்கு ஒப்பாக விவரிக்கின்றனர். வெற்றிட ஆஸ்பிரேஷன் சர்ஜிக்கல் கருக்கலைப்பில், ஒரு பெண் செயல்முறையின் போது ஒரு இழுவை அல்லது இழுக்கும் உணர்வை அனுபவிக்கலாம். டைலேஷன் மற்றும் எவேகுவேஷனில், ஒரு பெண் 1 அல்லது 2 நாட்களுக்கு லேசான தசைப்பிடிப்பை அனுபவிக்கலாம்.

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதா?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, திருமணம் ஆகாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். 1971-ம் ஆண்டு முதல் இந்தியாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. ஆனால், காலப்போக்கில் யார் கருக்கலைப்பு செய்யலாம் என்று அரசாங்கம் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. மில்லியன் கணக்கான பெண் கருக்கள் கருக்கலைப்பு செய்ததே இதற்குக் காரணம். இதனால் நாட்டில் ஆண், பெண் பாலின விகிதாசாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 20 முதல் 24 வாரங்களுக்குள் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்ற மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த பட்டியலில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்கள், மைனர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரிய குறைபாடுகள் கொண்ட கருக்கள் உள்ள பெண்கள், கர்ப்ப காலத்தில் திருமண நிலை மாறிய பெண்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் திருமணமாகாதவர்களுக்கு கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதா?

கருக்கலைப்பு செய்ய விரும்பும் திருமணமாகாத பெண்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உரிமைகளை வழங்குகிறது. இதன் மூலம் பெண்களின் திருமண நிலை அவர்கள் பாதுகாப்பான கருக்கலைப்பு அணுகலை மறுக்கவோ அல்லது அனுமதிக்கவோ ஒரு காரணமாக இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறது. மருத்துவ கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ் 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய தனியாக உள்ள மற்றும் திருமணமாகாத பெண்களுக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்புக்குப் பிறகு எந்த அளவு ரத்தப்போக்கு சாதாரணமானது?

கருக்கலைப்பு என்பது ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரால் சட்டப்பூர்வமாக செய்யப்படும் போது ஒரு கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். கருக்கலைப்புக்குப் பின் தசை பிடிப்பும் ரத்தக்கசிவும் சாதாரணம். இந்த அறிகுறிகளின் தீவிரம் மற்றும் கால அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கருக்கலைப்பு வகை மற்றும் கர்ப்பத்தின் கால அளவைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறும். பெரும்பாலான பெண்களுக்கு மருத்துவ அல்லது அறுவைசிகிச்சை கருக்கலைப்பைத் தொடர்ந்து பல மணி நேரம் கடுமையான இரத்தப்போக்கை ஏற்பட வாய்ப்புள்ளது. சில பெண்களுக்கு ஓரிரு வாரங்கள் வரை ரத்தக்கசிவு ஏற்பட வாய்புள்ளது.  ஆனால், பெரிய கட்டிகளைக் கடந்து செல்லும் பெண்கள், ஒரு மணி நேரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பேட்களை நனையும் நிலையில் உள்ள பெண்கள் கண்டிப்பாக ஒரு மகளிர் நல மருத்துவரை அணுகி அவசர உதவி பெற வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நான் கர்ப்பமாக இருந்தால்?

அறுவைச் சிகிச்சை மூலம் கருக்கலைப்பு கருப்பையில் உள்ள கருவை முழுமையாக அகற்றும் ஒரு பயனுள்ள செயல்முறை. அறுவைசிகிச்சை கருக்கலைப்பு முறைகள் எதுவும் செய்யப்பட்ட பிறகு, கரு முற்றிலும் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுவதால் நீங்கள் அதன் பிறகு கர்ப்பமாக இருக்க மாட்டீர்கள். ஆனால் மிக அரிதான சந்தர்ப்பங்களில், கருவின் எச்சங்கள் இன்னும் கருப்பைக்குள் இருந்தால், மீதமுள்ள அனைத்து திசுக்களையும் காலி செய்ய டி&இ செயலமுறையை மறுபடியும் செய்யலாம்.

முழுமையற்ற கருக்கலைப்பு என்றால் என்ன?

ஒரு முழுமையற்ற கருக்கலைப்பு என்பது முதல் 20 வாரங்களுக்குள் கர்ப்பத்தின் கூறுகளை பகுதியளவு வெளியேற்றுவதாகும். ஒரு முழுமையற்ற கருக்கலைப்பு வயிற்று அல்லது பெல்விக் வலியுடன் பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு மூலம் அடையாளம் காணப்படலாம்.

அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பில் உள்ள ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் என்ன?

அறுவைசிகிச்சை கருக்கலைப்பில் ஆபத்துகள் மற்றும் சிக்கல்கள் 3 சதவீதத்திற்கு மேல் இல்லாமல் மிகவும் குறைவாகவே உள்ளன, இது பெண் தனது கர்ப்பத்தில் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளார் என்பதைப் பொறுத்தது. இருப்பினும், அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் கருக்கலைப்பின் சிக்கல்கள் பின்வருமாறு இருக்கலாம்:

  • தொற்றுநோய் – சில பெண்கள் அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் தொற்றுநோயை அனுபவிக்கின்றனர், இது பொதுவாக முழுமையடையாத கருக்கலைப்பு காரணமாக ஏற்படுகிறது.
  • இரத்தக் கசிவு – சில நேரங்களில், அறுவைச் சிகிச்சை மூலம் கருக்கலைப்புக்குப் பின் ஏற்படும் இரத்தக் கசிவு அதிகமாக இருந்தால் கருப்பையின் உறிஞ்சும் சிகிச்சை தேவைப்படலாம்.
  • கருப்பையில் காயம் – கருப்பையின் சுவர்கள் மிகவும் மென்மையானவை, சில நேரங்களில், அறுவை சிகிச்சை கருவிகளின் பயன்பாடு சில சமயம் கருப்பையை துளைக்கலாம்.
  • கருப்பையில் காயம் – அறுவை சிகிச்சையின் போது கருப்பையை அதிகமாக நீட்டினால் கருப்பையில் காயம் ஏற்படலாம்.

எது சிறந்தது - மருத்துவ கருக்கலைப்பா அல்லது அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் கருக்கலைப்பா?

மருத்துவ கருக்கலைப்புடன் ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை கருக்கலைப்பின் செயல்திறன் மிகவும் அதிகமாக உள்ளது. பயிற்சி பெற்ற மகளிர் நல மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்களின் முழு மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இருப்பினும், செலவு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றால், அறுவை சிகிச்சை கருக்கலைப்பை விட மருத்துவ கருக்கலைப்புக்கு மிகவும் குறைவான செலவு ஆகும்.

ஒரு திட்டமிடாத கருவைக் கலைப்பது எப்படி?

திட்டமிடப்படாத கருத்தரிப்புகள் மிகவும் பொதுவானவை, மேலும் பல பெண்கள் அவற்றை கருக்கலைப்பு செய்ய விரும்புகின்றனர். கர்ப்பத்தை கலைக்க இரண்டு வழிகள் உள்ளன – அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு மற்றும் மருத்துவ கருக்கலைப்பு. ஆனால், கருக்கலைப்பு முறை என்பது கர்ப்பத்தின் நிலை மற்றும் பெண்ணின் உடல் நிலையைப் பொறுத்தது. பெண் 12 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு  பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு பெண் 9 வாரங்களுக்கும் குறைவான கர்ப்பமாக இருக்கும்போது மருத்துவ கருக்கலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவர் கருக்கலைப்புக்கு முன் அல்ட்ரா சவுண்ட் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து கருவுற்றிருக்கும் காலத்தை புரிந்து கொண்டு, எந்த வகை கருக்கலைப்பு மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்கிறார்.

4 வார கருவைக் கலைப்பது எப்படி?

4 வார கர்ப்பத்தை கலைக்க மருத்துவர்கள் மருத்துவ கருக்கலைப்பை பரிந்துரைக்கின்றனர். மிஃபெப்ரிஸ்டோன் பொதுவாக மருத்துவ கருக்கலைப்பின் போது பரிந்துரைக்கப்படுகிறது. இது புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதை நிறுத்துவதால் கருப்பையின் உட்பகுதி உடைந்து கர்ப்பம் தொடர முடியாமல் போகும். உங்கள் சுகாதார வழங்குனர் அதன் சரியான அளவு மற்றும் எப்போது அதை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

5 வார கருவைக் கலைப்பது எப்படி?

மருத்துவ கருக்கலைப்பு என்பது 5 வார கருவைக் கலைக்க மிகவும் பயனுள்ள வழி. புரோஜெஸ்டிரோன் என்ற ஹார்மோன் சுரப்பதை நிறுத்த மிஃபெப்ரிஸ்டோன் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது கருப்பை உள்அடுக்கை உடைத்து கருவை கலைக்க உதவுகிறது.

கருக்கலைப்பு செய்த எவ்வளவு நாட்களுக்குப் பிறகு நான் கர்ப்பமாகலாம்?

கருக்கலைப்புக்குப் பிறகு நீங்கள் மீண்டும் விரைவில் கருத்தரிக்கலாம். அறுவைசிகிச்சை கருக்கலைப்புக்குப் பிறகு 8 நாட்களுக்குப் பிறகு கருப்பையிலிருந்து ஒரு முட்டை வெளியிடப்படலாம், அதாவது உங்கள் அடுத்த மாதவிடாய்க்கு முன்பே நீங்கள் மீண்டும் கர்ப்பமாகலாம்.

கருக்கலைப்புக்குப் பிறகு விரைவில் குணமடைய என்ன சாப்பிட வேண்டும்?

கருக்கலைப்புக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பலவீனமடைகின்றனர். அதிக ரத்தப்போக்கு காரணமாக உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படலாம். இது தவிர, கால்சியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உடலில் குறைவாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் உடலின் இயல்பான செயல்பாட்டிற்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் கருக்கலைப்புக்குப் பிறகு விரைவாக குணமடைய முழு தானியங்கள், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

கருக்கலைப்பு என் கருவுறுதலை பாதிக்குமா?

அறுவைசிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்துகொள்வது பொதுவாக எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை பாதிக்காது அல்லது குறைக்காது. ஆனால் கருப்பையில் காயம் ஏற்பட்டாலோ அல்லது அறுவை சிகிச்சை மூலம் கருப்பையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டாலோ அதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் சில சிக்கல்களை ஏற்படுத்தும்.

View more questions downArrow

What Our Patients Say

Based on 138 Recommendations | Rated 5.0 Out of 5
  • MA

    Mahalakshmi

    verified
    5/5

    Excellent

    City : Madurai
  • NI

    Nikitha

    verified
    4/5

    Over all good experience

    City : Bangalore
  • SI

    Simran

    verified
    5/5

    Overall experience is great

    City : Delhi
  • US

    Usha

    verified
    4/5

    Process safe aur private tha, doctors supportive the.

    City : Mumbai
  • SU

    Sunaina

    verified
    5/5

    Process was handelled privately and carefully

    City : Pune
  • PA

    Parul

    verified
    5/5

    Procedure was safe and private

    City : Gurgaon
    Treated by : Dr. Parul Thakran