





பெண்களுக்கு மிகவும் தொந்தரவு மிகுந்தாகவும், சிக்கலானதாகவும் அமைவது கர்ப்ப காலத்தில் உருவாகும் மூல நோய் (பைல்ஸ்). இதற்கான சிறந்த சிகிச்சை முறையை பெற்றிட உடனே தொடர்பு கொள்ளுங்கள் - பிரிஸ்டின் கேர். சிறந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த எங்கள் மூல நோய் மருத்துவரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை குறித்து விவாதிக்க - உடனே பதிவு செய்திடுங்கள்.
பெண்களுக்கு மிகவும் தொந்தரவு மிகுந்தாகவும், சிக்கலானதாகவும் அமைவது கர்ப்ப காலத்தில் உருவாகும் மூல நோய் (பைல்ஸ்). இதற்கான சிறந்த சிகிச்சை முறையை பெற்றிட உடனே தொடர்பு கொள்ளுங்கள் - பிரிஸ்டின் கேர். ... மேலும் வாசிக்க
Free Consultation
Free Cab Facility
இல்லை செலவு EMI
Support in Insurance Claim
1-day Hospitalization
சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA
Choose Your City
It help us to find the best doctors near you.
அகமதாபாத்
பெங்களூர்
புவனேஸ்வர்
சண்டிகர்
சென்னை
கோயம்புத்தோர்
டெல்லி
ஹைதராபாத்
இந்தூர்
ஜெய்ப்பூர்
கொச்சி
கொல்கத்தா
கோழிகோட்
லக்னோ
மதுரை
மும்பை
நாக்பூர்
பாட்னா
புனே
ராய்ப்பூர்
ராஞ்சி
திருவனந்தபுரம்
விஜயவாடா
விசாகபத்னம்
டெல்லி
ஹைதராபாத்
புனே
மும்பை
பெங்களூர்
மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் உள்ளே உள்ள நரம்புகள் வீங்கி அதனால் உருவாகும், வீக்கமடைந்த நிலையே பைல்ஸ் எனப்படும். தமிழில், மூல நோய் என அழைப்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாத காலகட்டத்தில் பைல்ஸ் மிகவும் பொதுவானது. இது நரம்புகளில், கருப்பை விரவடைவதன் காரணத்தால் வரும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக உருவாகும்.
பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும். இவ்வகை மூல நோய் கட்டியினால் உண்டாகும் வலி மற்றும் அசௌகரியம் கர்ப்பத்தினை இன்னும் சவால் நிறைந்ததாக மாற்றுகின்றன..
Fill details to get actual cost
கர்ப்ப காலத்தில் மூலநோய் உருவாவதற்கு வாய்ப்புள்ள,
சில பொதுவான காரணச்சூழல்களை கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்..
நரம்புகளில் அதிகரித்த அழுத்தம்-
கருவின் கூடுதல் எடை காரணமாக இடுப்புப் பகுதி மற்றும் கீழ் செரிமானப் பாதை (குடல்) மீது அழுத்தம் கணிசமாக அதிகரிக்கிறது.இந்த வகையில் உருவாகும் அழுத்தம், நரம்புகளில் இரத்த சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக, இரத்தம் நரம்புகளில் தேங்குவதற்காண வாய்ப்புகள் உண்டு. இது நரம்புகளில் வீக்கத்தை உண்டுபண்ணும். பொதுவாகவே, கருவின் வளர்ச்சி அதிகரிக்கும் பொருட்டு, கருவுக்கு இரத்த ஓட்டம் அதிகம் இருக்கும். இதனால், நரம்புகளில் இரத்தம் தேங்குவதற்காண சாத்தியங்கள் அதிகமாகும்.
ஹார்மோன் மாற்றங்கள்-
பொதுவாக, பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பு இயல்பான அளவைக் காட்டிலும், கூடுதலும் குறைவாகவுமே இருக்கும். இந்த காலகட்டத்தில் புரஜோஸ்ட்ரோன் சுரப்பியின் அளவு கூடுவதால், நரம்புகள் ஓய்வுநிலை அடையும். இவ்வகையில் நரம்புகள் தளர்வடைவதால், தசைகள் சுருங்கும். அதனோடு, நரம்பு வால்வுகள் தானாகவே மூடப்படும். இது, மூல நோய் திசுக்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து, வீக்கம் ஏற்பட வழிவகுக்கும்.
மலச்சிக்கல்-
கர்ப்பகாலத்தில், சுமார் 16% முதல் 39% பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அதற்கான காரணங்கள்..
மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் உள்ள நரம்புகள், மலச்சிக்கலின் விளைவாக வீக்கமடையும். நோயாளி இவ்வகை வீக்கத்தால், மலத்தை வெளியேற்ற கடினமாக உணர்வதோடு, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்-
மலச்சிக்கலின் சாத்தியங்களை, நார்ச்சத்து குறைந்த உணவுப் பண்டங்கள் எடுத்துக்கொள்வது அதிகரிக்கும். கடைசியில், இது மூல நோயில் வந்து சேர்க்கிறது. தொடர்ந்து, நார்ச்சத்து குறைவான உணவை உண்பது சிக்கலை, ஏற்கனவே இருக்கும் நிலையை மேலும் மோசம் செய்யும்.
செயலற்ற வாழ்க்கை முறை-
பெண்கள் கர்ப்பம் அடைந்த பின், உடல் உழைப்பைக்கோருய் பல செயல்களை தவிர்ப்பது இயல்பு. நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள மருத்துவரும் அறிவுறுத்துவார். இந்த சூழல்களில், பெண்கள் ஓய்வெடுப்பதற்காக, அமரும்போதும் படுக்கும்போதும், குளூட்டியல் தசைகள் பரந்து விரிவடையும். இந்த விரிதல், மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் உள்ள சிறு நரம்புகள் அழுத்தம் அடைய காரணமாக உருவாகும். இவ்வகை நரம்புகள் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து இரத்தத்தில் மூழ்கி, குவியல்களுக்கு வழிவகுக்கும்.
இந்த காரணிகள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் மூல நோய் வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க முடியும்.
ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஆரம்பம் ஆனவுடன், கீழே பட்டியலிடப்பட்ட சில அல்லது அனைத்து அறிகுறிகளையும் பெண்கள் உணரத் தொடங்குவார்கள்..
கர்ப்ப காலத்தில் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், காலம் தாழ்த்தாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுகி நிலைமையை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிகிச்சையை தொடங்குக
உடலில் பரிசோதனைகள் செய்வது மூலம், கட்டிகள் அல்லது மூல நோயின் திசுக்களுக்காண அறிகுறிகள் வழியாக கண்டறியலாம்.மூல நோய் இருப்பதை உறுதி செய்யவும், நோயின் தீவிரம் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறியவும் கீழ்க்கண்ட சோதனை முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்..
மேற்கண்ட பரிசோதனைகள், நோயின் தீவிர நிலையை கண்டறிய உதவும். மேலும் அதனை நிர்வகித்து எந்த வகையான சிகிச்சை பொருத்தமானது என்று சிந்திக்க உதவும்.
Diet & Lifestyle Consultation
Post-Surgery Free Follow-Up
Free Cab Facility
24*7 Patient Support
பெண்களுக்கு, இவ்வகை கர்ப்ப கால மூல நோயிலிருந்து குணமடைய பல்வகை சிகிச்சை முறை உள்ளது. பொதுவான சில சிகிச்சை நடைமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு, இதில் அனைத்து முறைகளுமே சாத்தியமானவை என்று கூற முடியாது என்பதை கவனம் செலுத்த வேண்டும்.
மேற்கண்ட முறைகளில் நோயாளிகளின் நிலையே எந்த முறைகளை மேற்கொண்டு வரலாம் என்பதை மருத்துவர் தீர்மானிக்க உதவும். அவர் நோயின் நிலைமையைப் பொருத்தும், தகுந்த முறையை அறிவுறுத்துவார்.
மூலநோய்க்காண அறிகுறிகள் குணமாக, பெண்கள் தம் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த மாற்றங்களில் உணவுப் பழக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் உடல் உழைப்பு கோரும் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் ஆகியவை அடங்கும். கோதுமை தவிடு, கொடிமுந்திரி, ஆப்பிள், பேரிக்காய், பருப்பு, முழு கோதுமை ரொட்டி, ப்ரோக்கோலி, தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை நரம்புகள் தேய்ந்து வீக்கமடைவதை குறைக்கும். அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை மலச்சிக்கலின் அபாயத்தை அதிகரிக்கும்.
உணவுடன், பெண்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மலக்குடல் பகுதியில் இரத்தம் தேங்குவதைத் தடுக்கவும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மூல நோய் திசுக்கட்டிகள் உருவாவதை தடுக்கவும் நிர்வகிக்கவும் Kegel பயிற்சிகள் உதவியாக இருக்கும்.
திசுக்கட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் சில பொதுவான மேற்பூச்சு சிகிச்சைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது..-
கர்ப்பக் திசுக்கட்டிகளுக்களுக்கான மேற்பூச்சு சிகிச்சையைப் மேற்கொள்வதற்கு முன், நோயாளியின் தனிப்பட்ட விஷயத்தில் அவை பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ள மருத்துவரை அணுகுதல் அவசியம்..
பொதுவாக மூல நோய் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கக்கூடும்.. எனவே, குடல் அழற்சிக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுதல் முக்கியம். கர்ப்ப காலத்தில் திசுக் கட்டிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளை பட்டியலில் காணலாம்..
மருத்துவரின் பரிந்துரையின்றி நோயாளி எந்தவொரு மேற்கண்ட மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுதலை தவிர்ப்பது அவசியம்.
கர்ப்ப காலத்தில் அறுவை சிகிச்சை செய்யலாமா என்பது, பெண் மற்றும் அவரது குழந்தைக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு மருத்துவரால் முடிவு செய்யப்படும். திசுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க கீழ்க்கண்ட பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் செய்யப்படலாம்..
இது தவிர, அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சைகளான ரப்பர் பேண்ட் லிகேஷன் அல்லது ஸ்க்லரோதெரபி போன்றவையும் தொடக்க நிலைகளில் மூல நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் மூலநோய்க்கு அறுவை சிகிச்சை பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை, நிலைமை மிகவும் கடுமையானதாக இருந்தால் மற்றும் பிற சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்ற நிலைமையில், அறுவைச் சிகிச்சை மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் மூல நோய்க்காண அறுவை சிகிச்சையின் ஆபத்துகள் மிக அதிகம். இது அதிக இரத்தப்போக்கு, தொற்று மற்றும் முன்கூட்டிய பிரசவத்தை கூட ஏற்படுத்தும். இதன் காரணமாக, மருத்துவர்கள் பெரும்பாலும் விழிப்புடன் காத்திருப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பிரசவம் வரை நிலைமையை நிர்வகிக்க பரிந்துரைக்கின்றனர். ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், பிரசவத்திற்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் பிரச்சனை நீங்கவில்லை என்றால் அறுவை சிகிச்சை சிகிச்சை பரிசீலிக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் மூல நோயைத் தடுக்க, ஒரு பெண் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்:
மருத்துவரின் இந்த உதவிக்குறிப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பெண்கள் மூல நோய் திசுக்கட்டிகளின் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தின் அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் ஏற்கனவே உள்ள அறிகுறிகளில் இருந்து மீளலாம்..
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பைல்ஸ் குழந்தையின் ஆரோக்கியம் அல்லது வளர்ச்சியை பாதிக்கலாம் என்று பெண்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள். இருப்பினும், இதை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை.
கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாத காலகட்டத்தில், உள்புற அல்லது வெளிப்புற மூல நோய் திசுக்களில் கட்டி ஏற்படும். கர்ப்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகை மூல நோய் தான் பொதுவாக உருவாகும் என்பதை உறுதிப்படுத்த தெளிவு நிறைந்த சான்றுகள் அல்லது ஆய்வுகள் எதுவும் இல்லை. பெண்களில் ஒன்று அல்லது இரண்டு வகையான கட்டிகள் சமமாக உருவாக வாய்ப்புள்ளன..
பெரும்பாலான சூழல்களில், குழந்தை பேற்றுக்கு பிறகு, ஹார்மோன் சுரப்பதனீ அளவுகள் சீரான நிலையடைந்து, அதிகப்படியான அழுத்தம் தணிவதால், கட்டிகள் தானாக சரியாகிவிடக்கூடும்.. இருந்தாலும், சில நிலையில், பழைய நோய்நிலை நீடிக்கும், இதன் காரணத்தால் நோயாளிக்கு சிகிச்சைமுறை தேவைப்படக்கூடும்.
பொதுவாக, மூல நோய்க்காண பொருத்தமான சிகிச்சைமுறை நோயின் நிலையை கண்டு ஆய்வறிந்த பிறகு, மருத்துவரால் தீர்மானம் செய்யப்படுகிறது. தொடக்க நிலைகளில்,, நோயாளிக்கு ஸ்க்லரோதெரபி மற்றும் ஊடுகதிர் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். கடுமை நிறைந்த நிலையில், நோயாளிக்கு ஹெமோர்ஹாய்டெக்டோமி அல்லது ஸ்டேபிள்டு ஹெமோர்ஹாய்டோபெக்ஸி பரிந்துரைக்கப்படலாம்.
மேற்கண்ட தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவதன் மூலமாக அல்லது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தல் மூலமாக எங்கள் பிரிஸ்டின் கேர் மருத்துவர்கள் உடன் ஆலோசனையே உறுதி செய்யவும்.
எங்கள் ஊழியர்கள் மருத்துவர்களின் நேர அட்டவணை பொருத்து உங்களுக்காண மருத்துவ ஆலோசனை நேரத்தை உறுதிபடத்துவார்கள்.
nagaraju
Recommends
The treatment was good could be more easy on patient
Daksha, 27 Yrs
Recommends
The treatment was great doctor checked me after treatment staff was also very supportive everything was good. Thanks pristyn care.
Nitin
Recommends
Good experience with the hospital and the doctor overall treatment and everything.
Harshal, 40 Yrs
Recommends
The treatment was good and easily done by the doctor and their team after telling them my concern. After all procedure i am not feeling any pain or discomfort.
Manish
Recommends
Total good experience with Pristyn care executive
Manne Manikanta, 29 Yrs
Recommends
I was suffering from fistula for the past 3 years, but after your laser treatment, I am very happy to share this post.