location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book FREE Appointment

இந்தியாவில் கர்ப்பகால மூல நோய் (பைல்ஸ்) சிகிச்சை (Pregnancy Hemorrhoids (Piles) Treatment in Tamil)

பெண்களுக்கு மிகவும் தொந்தரவு மிகுந்தாகவும், சிக்கலானதாகவும் அமைவது கர்ப்ப காலத்தில் உருவாகும் மூல நோய் (பைல்ஸ்). இதற்கான சிறந்த சிகிச்சை முறையை பெற்றிட உடனே தொடர்பு கொள்ளுங்கள் - பிரிஸ்டின் கேர்‌. சிறந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த எங்கள் மூல நோய் மருத்துவரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை குறித்து விவாதிக்க - உடனே பதிவு செய்திடுங்கள்.

பெண்களுக்கு மிகவும் தொந்தரவு மிகுந்தாகவும், சிக்கலானதாகவும் அமைவது கர்ப்ப காலத்தில் உருவாகும் மூல நோய் (பைல்ஸ்). இதற்கான சிறந்த சிகிச்சை முறையை பெற்றிட உடனே தொடர்பு கொள்ளுங்கள் - பிரிஸ்டின் கேர்‌. ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
Call icon
We are Rated
3 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
200+ மருத்துவமனைகள்
30+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

30+

நகரங்கள்

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

கர்ப்ப காலத்தில் பைல்ஸ் சிகிச்சைக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

அகமதாபாத்

பெங்களூர்

புவனேஸ்வர்

சண்டிகர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

இந்தூர்

ஜெய்ப்பூர்

கொச்சி

கொல்கத்தா

கோழிகோட்

லக்னோ

மதுரை

மும்பை

பாட்னா

புனே

ராய்ப்பூர்

ராஞ்சி

திருவனந்தபுரம்

விஜயவாடா

விசாகபத்னம்

டெல்லி

ஹைதராபாத்

புனே

மும்பை

பெங்களூர்

  • online dot green
    Dr. Vipin Nagpal - Piles Treatment Specialist in Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi, over 31+  Years Experience

    Dr. Vipin Nagpal

    MBBS, MS-General Surgery
    31+ Yrs.Exp.

    4.5/5

    31+ Years Experience

    location icon Pristyn Care Elantis Hospital, Lajpat Nagar, Delhi
    Call Us
    080-6542-3711
  • online dot green
    Dr. Rakesh Shivhare - Piles Treatment Specialist in Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003, over 30+  Years Experience

    Dr. Rakesh Shivhare

    MBBS, MS(GI & General Surgeon)
    30+ Yrs.Exp.

    5.0/5

    30+ Years Experience

    location icon Opp.Badwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore, Madhya Pradesh 452003
    Call Us
    080-6542-3720
  • online dot green
    Dr. Apoorv Shrivastava - Piles Treatment Specialist in Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza,  Manorama Ganj, Old Palasia, Indore - 452018, over 25+  Years Experience

    Dr. Apoorv Shrivastava

    MBBS, DNB-General Surgery
    25+ Yrs.Exp.

    4.5/5

    25+ Years Experience

    location icon Pristyn Care Eminent Hospital 6/1 Opp. Barwani Plaza, Manorama Ganj, Old Palasia, Indore - 452018
    Call Us
    080-6542-3720
  • online dot green
    Dr. Daipayan Ghosh - Piles Treatment Specialist in Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon, over 23+  Years Experience

    Dr. Daipayan Ghosh

    MBBS, DNB-General Surgery
    23+ Yrs.Exp.

    4.5/5

    23+ Years Experience

    location icon Pristyn Care Sheetla Hospital, Sector 8, Gurgaon
    Call Us
    080-6542-3711

கர்ப்ப காலத்தில் மூல நோய்/ மூல நோய் கட்டிகள் (பைல்ஸ்) - Pregnancy Piles Treatment in Tamil

மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் உள்ளே உள்ள நரம்புகள் வீங்கி அதனால் உருவாகும், வீக்கமடைந்த  நிலையே பைல்ஸ் எனப்படும். தமிழில், மூல நோய் என அழைப்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாத காலகட்டத்தில் பைல்ஸ் மிகவும் பொதுவானது. இது நரம்புகளில், கருப்பை விரவடைவதன் காரணத்தால் வரும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக உருவாகும்.
​​​​​​​
பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும். இவ்வகை மூல நோய் கட்டியினால் உண்டாகும் வலி மற்றும் அசௌகரியம் கர்ப்பத்தினை இன்னும் சவால் நிறைந்ததாக மாற்றுகின்றன..

cost calculator

Free மூலவியாதி Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மூல நோய்க்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தில் மூலநோய் உருவாவதற்கு வாய்ப்புள்ள,

சில பொதுவான காரணச்சூழல்களை கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்..

நரம்புகளில் அதிகரித்த அழுத்தம்-

கருவின் கூடுதல் எடை காரணமாக இடுப்புப் பகுதி மற்றும் கீழ் செரிமானப் பாதை (குடல்) மீது அழுத்தம் கணிசமாக அதிகரிக்கிறது.இந்த வகையில் உருவாகும் அழுத்தம், நரம்புகளில் இரத்த சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக, இரத்தம் நரம்புகளில் தேங்குவதற்காண வாய்ப்புகள் உண்டு. இது நரம்புகளில் வீக்கத்தை உண்டுபண்ணும். பொதுவாகவே, கருவின் வளர்ச்சி அதிகரிக்கும் பொருட்டு, கருவுக்கு இரத்த ஓட்டம் அதிகம் இருக்கும். இதனால், நரம்புகளில் இரத்தம் தேங்குவதற்காண சாத்தியங்கள் அதிகமாகும்.

ஹார்மோன் மாற்றங்கள்-

பொதுவாக, பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பு இயல்பான அளவைக் காட்டிலும், கூடுதலும் குறைவாகவுமே இருக்கும். இந்த காலகட்டத்தில் புரஜோஸ்ட்ரோன் சுரப்பியின் அளவு கூடுவதால், நரம்புகள் ஓய்வுநிலை அடையும். இவ்வகையில் நரம்புகள் தளர்வடைவதால், தசைகள் சுருங்கும். அதனோடு, நரம்பு வால்வுகள் தானாகவே மூடப்படும். இது, மூல நோய் திசுக்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து, வீக்கம் ஏற்பட வழிவகுக்கும்.

 மலச்சிக்கல்-

கர்ப்பகாலத்தில், சுமார் 16% முதல் 39% பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அதற்கான காரணங்கள்..

  • புரஜோஸ்ட்ரோன் சுரப்பியின் அளவு கூடுவதால்,
  • கருவின் அளவு
  • மரபு ரீதியாக விட்டமின் குறைபாடு
  • அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால், இரும்பு சத்து அதிகரித்தல்

மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் உள்ள நரம்புகள், மலச்சிக்கலின் விளைவாக வீக்கமடையும். நோயாளி இவ்வகை வீக்கத்தால், மலத்தை வெளியேற்ற கடினமாக உணர்வதோடு, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்-

மலச்சிக்கலின் சாத்தியங்களை, நார்ச்சத்து குறைந்த உணவுப் பண்டங்கள் எடுத்துக்கொள்வது அதிகரிக்கும். கடைசியில், இது மூல நோயில் வந்து சேர்க்கிறது. தொடர்ந்து, நார்ச்சத்து குறைவான உணவை உண்பது சிக்கலை, ஏற்கனவே இருக்கும் நிலையை மேலும் மோசம் செய்யும்.

செயலற்ற வாழ்க்கை முறை-

பெண்கள் கர்ப்பம் அடைந்த பின், உடல் உழைப்பைக்கோருய் பல செயல்களை தவிர்ப்பது இயல்பு. நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள மருத்துவரும் அறிவுறுத்துவார். இந்த சூழல்களில், பெண்கள் ஓய்வெடுப்பதற்காக, அமரும்போதும் படுக்கும்போதும், குளூட்டியல் தசைகள் பரந்து விரிவடையும்‌. இந்த விரிதல், மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதிகளில் உள்ள சிறு நரம்புகள் அழுத்தம் அடைய காரணமாக உருவாகும். இவ்வகை நரம்புகள் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து இரத்தத்தில் மூழ்கி, குவியல்களுக்கு வழிவகுக்கும்.

இந்த காரணிகள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் மூல நோய் வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க முடியும்.

Experiencing Any Of These Piles Symptoms?

கர்ப்ப காலத்தில் மூல நோய் காண அறிகுறிகள்

ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஆரம்பம் ஆனவுடன், கீழே பட்டியலிடப்பட்ட சில அல்லது அனைத்து அறிகுறிகளையும் பெண்கள்  உணரத்  தொடங்குவார்கள்..

  • மலம் கழிக்கும் போது, மலக்குடல் பகுதிகளில் வலி மற்றும் அசௌகரியம். அல்லது, குடல் அசைவுகள் ஏற்படும் போது மட்டும் வலி..
  • குத பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுதல்.
  • வீங்கிய திசுக்கள் முக்கியமாக ஆசனவாயைச் சுற்றி தெளிவாகத் தெரியும். அவை உட்கார்ந்திருக்கும்போது வலியையும் ஏற்படுத்தும்.
  • மலம் கழிக்கும்போதும் இரத்தப்போக்கு உருவாகலாம். இந்த நிலை மக்களை கவலைகொள்ளச் செய்யும் மூல நோயின் பிரதான அறிகுறியில் ஒன்றேயாகும். இரத்தம் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  • ஆசனவாயில் இருந்து சளி வெளியேற்றம் உட்புற மூல நோய் காரணமாக எழும் இதுவும் மற்றொரு பிரதான அறிகுறியாகும். வீக்கமடைந்த மூல நோய் சளிக்கு வழிவகுக்கிறது, இது தண்ணீரை விட தடிமனான தெளிவான திரவமாகும்.
  • கடுமையான சந்தர்ப்பங்களில், ஹெமோர்ஹாய்டல் திசுக்கள் ஆசனவாய்க்கு வெளியே நீண்டு செல்ல ஆரம்பிக்கலாம். இது ப்ரோலாப்ஸ்டு பைல்ஸ்/ஹெமோர்ஹாய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது, இது மிகவும் வேதனையானது.

கர்ப்ப காலத்தில் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், காலம் தாழ்த்தாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுகி நிலைமையை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சிகிச்சையை தொடங்குக

கர்ப்ப காலத்தில் மூல நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

உடலில் பரிசோதனைகள் செய்வது மூலம், கட்டிகள் அல்லது மூல நோயின் திசுக்களுக்காண அறிகுறிகள் வழியாக கண்டறியலாம்.மூல நோய் இருப்பதை உறுதி செய்யவும், நோயின் தீவிரம் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறியவும் கீழ்க்கண்ட சோதனை முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்..

  • டிஜிட்டல் மலக்குடல் சோதனைமுறைஇவ்வகை பரிசோதனையில், கட்டிகள் உள்ளனவா என்று பார்க்க மருத்துவர் கையுறை மற்றும் உய்வூட்டப்பட்ட தன்விரலை ஆசனவாயில் செருகுகிறார்.
  • அனோஸ்கோபிஇவ்வகை பரிசோதனையானது, மலக்குடல் மற்றும் வீக்கமடைந்த நரம்புகளின் உள் அமைப்புகளை ஆய்வு செய்வதற்கு சிறிய, வெளிச்சம் பொருந்திய கருவியை பயன்படுத்துவதை உள்ளடக்கும்.
  • கொலோனோஸ்கோபிஇவ்வகை பரிசோதனையில், வீங்கிய நரம்புகள் மற்றும் வீக்கம் ஏற்பட்ட திசுக்களை உள்ளடங்கிய அசாதாரண நிலைகளைக் கண்டறிய முழுமையான பெருங்குடல் மற்றும் மலக்குடலை ஆய்வு செய்ய, நெகிழ்வானதொரு நோக்குக்கருவி  பயன்படுத்தப்படும்.

மேற்கண்ட பரிசோதனைகள், நோயின் தீவிர நிலையை கண்டறிய உதவும். மேலும் அதனை நிர்வகித்து எந்த வகையான சிகிச்சை பொருத்தமானது என்று சிந்திக்க உதவும்.

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Recovery Follow up

Free Cab Facility

24*7 Patient Support

List of Top Health Insurance Provider for Piles Surgery
Insurance Providers FREE Quotes
Aditya Birla Health Insurance Co. Ltd. Aditya Birla Health Insurance Co. Ltd.
National Insurance Co. Ltd. National Insurance Co. Ltd.
Bajaj Allianz General Insurance Co. Ltd Bajaj Allianz General Insurance Co. Ltd
Bharti AXA General Insurance Co. Ltd. Bharti AXA General Insurance Co. Ltd.
Future General India Insurance Co. Ltd. Future General India Insurance Co. Ltd.
HDFC ERGO General Insurance Co. Ltd. HDFC ERGO General Insurance Co. Ltd.

கர்ப்ப காலத்தில் மூல நோய்க்காண் சிகிச்சை முறைகள்

பெண்களுக்கு, இவ்வகை கர்ப்ப கால மூல நோயிலிருந்து குணமடைய பல்வகை சிகிச்சை முறை உள்ளது. பொதுவான சில சிகிச்சை நடைமுறைகள்‌ கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு, இதில் அனைத்து முறைகளுமே சாத்தியமானவை என்று கூற முடியாது என்பதை கவனம் செலுத்த வேண்டும்.

  • அறிகுறிகளைச் சரிசெய்ய உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி போன்ற  வாழ்க்கை முறையில்  மாற்றங்களை செய்தல்.
  • நிவாரணத்திற்காக குதப் பகுதியில் நேரடியாகப் பயன்படுத்தப்படும் மேற்பூச்சு சிகிச்சைகள்.
  • சிட்ஜ் குளியல்முறை. நரம்புகளில் உள்ள வலி மற்றும் வீக்கத்தைத் தணிக்க மென்சூடான நீரைப் பயன்படுத்துதல்.
  • மூல நோய் மெத்தைகளை பயன்படுத்தலாம் அல்லது வட்டமான தலையணை அமரும் போது வலியைக்  குறைக்கும்.
  • வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதற்கு மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்..
  • ரப்பர் பேண்ட் இணைப்பு அல்லது லேசர் சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சை அல்லாத நடைமுறைகள்.
  • ஹெமோர்ஹாய்டெக்டோமி அல்லது ஸ்டேப்லர் ஹெமோர்ஹாய்டோபெக்ஸி போன்ற அறுவை சிகிச்சை.

மேற்கண்ட முறைகளில் நோயாளிகளின் நிலையே எந்த முறைகளை மேற்கொண்டு வரலாம் என்பதை மருத்துவர் தீர்மானிக்க உதவும். அவர் நோயின் நிலைமையைப் பொருத்தும், தகுந்த முறையை அறிவுறுத்துவார்.

மூலநோய்க்காண அறிகுறிகள் குணமாக வாழ்க்கை முறையில் மேற்க்கொள்ள வேண்டிய மாற்றங்கள்

மூலநோய்க்காண அறிகுறிகள் குணமாக, பெண்கள் தம் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த மாற்றங்களில் உணவுப் பழக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் உடல் உழைப்பு கோரும் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் ஆகியவை அடங்கும். கோதுமை தவிடு, கொடிமுந்திரி, ஆப்பிள், பேரிக்காய், பருப்பு, முழு கோதுமை ரொட்டி, ப்ரோக்கோலி, தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை நரம்புகள் தேய்ந்து வீக்கமடைவதை குறைக்கும். அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை  பெண்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை மலச்சிக்கலின் அபாயத்தை அதிகரிக்கும்.
​​​​​​​
உணவுடன், பெண்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மலக்குடல் பகுதியில் இரத்தம் தேங்குவதைத் தடுக்கவும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மூல நோய் திசுக்கட்டிகள் உருவாவதை தடுக்கவும் நிர்வகிக்கவும் Kegel பயிற்சிகள் உதவியாக இருக்கும்.

கர்ப்பபை மூல நோய்க்காண மேற்பூச்சு சிகிச்சைகள்

திசுக்கட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் சில பொதுவான மேற்பூச்சு சிகிச்சைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது..-

  • விட்ச் கேசல், இது குதப் பகுதியில் உருவாகும் அழற்சி மற்றும் அரிப்பைக் குறைக்கும் ஒரு இயற்கையான அஸ்ட்ரிஜன்ட் ஆகும். பருத்திப் பந்து அல்லது திண்டு மூலம் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அலோ வேர்ரா, எரிச்சலூட்டும் மேற்புற தோல் பகுதியை ஆற்ற உதவும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தாவரத்திலிருந்து பெறப்பட்ட ஜெல் என்பதால், நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தலாம்..
  • பெட்ரோலியம் ஜெல்லி பெரும்பாலும் மலக்குடல் பகுதியில் உராய்வு மற்றும் எரிச்சலைக் குறைக்க ஒரு மசகு எண்ணெய் பயன்படுத்தப்படும். இது அப்பகுதியை ஈரமாக வைத்திருக்கவும், வறட்சி மற்றும் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவி புரியும்.
  • துத்தநாக ஆக்சைடு, இது விட்ச் ஹேசல் போன்ற லேசான துவர்ப்பு தன்மை கொண்டது.. இது வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும். இதையும் ஒரு கிரீம் அல்லது களிம்பு போன்றே பயன்படுத்தலாம்.

கர்ப்பக் திசுக்கட்டிகளுக்களுக்கான மேற்பூச்சு சிகிச்சையைப் மேற்கொள்வதற்கு முன், நோயாளியின் தனிப்பட்ட விஷயத்தில் அவை பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்து கொள்ள மருத்துவரை அணுகுதல் அவசியம்..

கர்ப்ப மூல நோய்க்காண மருந்துகள்

பொதுவாக மூல நோய் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கக்கூடும்.. எனவே, குடல் அழற்சிக்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுதல் முக்கியம். கர்ப்ப காலத்தில் திசுக் கட்டிகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளை பட்டியலில் காணலாம்..

  • சைல்யம் அல்லது மெத்தில்செல்லூலோஸ் போன்ற நார்ச்சத்து கூட்டிப் பொருட்கள் பரிந்துரைக்கப்படும், இது மலத்தை மென்மையாக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.
  • டோக்குசேட் சோடியம் போன்ற மல மென்மைப்படுத்திகள், மலம் எளிதாக வெளியேறவும், குடல் அசைவுகளின் போது வரும் சிரமத்தைக் குறைக்கவும் உதவும்.
  • ஹைட்ரோகார்ட்டிசோன் கிரீம், லிடோக்கைன் அல்லது பென்சோக்கைன் கிரீம்கள் போன்ற மேற்பூச்சு சிகிச்சைகள், கர்ப்பக் திசுக் கட்டிகளுக்குத் தொடர்புடைய வலி மற்றும் அரிப்புகளைப் குறைக்க உதவும்.
  • அசட்டமினோபென் (டைல்லெனோல்) குத பகுதியில் உள்ள வலியை நிர்வகிக்கவும் பரிந்துரைக்கப்படலாம்.

மருத்துவரின் பரிந்துரையின்றி நோயாளி எந்தவொரு மேற்கண்ட மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுதலை தவிர்ப்பது அவசியம்.

கர்ப்ப காலத்தில் பைல்ஸ் அறுவை சிகிச்சை - Surgery for Piles During Pregnancy

கர்ப்ப காலத்தில் அறுவை சிகிச்சை செய்யலாமா என்பது, பெண் மற்றும் அவரது குழந்தைக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு மருத்துவரால் முடிவு செய்யப்படும். திசுக்கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க கீழ்க்கண்ட பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் செய்யப்படலாம்..

  • ஹெமோர்ஹாய்டெக்டோமி: இது ஒரு அறுவை சிகிச்சை ஆகும், இதில் ஹெமோர்ஹாய்டல் திசுக்கள் ஸ்கால்பெல் மூலம் அகற்றப்படுகின்றன. இது கணிசமான அபாயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களைக் கொண்ட ஒரு ஆக்கிரமிப்பு சிகிச்சை செயல்முறையாகும்.
  • ஸ்டேபிள்டு ஹெமோர்ஹாய்டோபெக்ஸி: இது இரத்த விநியோகத்தைக் குறைப்பதற்கும் வீங்கிய நரம்புகளை சுருங்கச் செய்வதற்கும் மலக்குடலுக்குள் திசுக்கட்டிகளை அவற்றின் அசல் நிலைக்குத் தள்ளும் ஒரு குறைந்தபட்ச ஊடுருவும் செயல்முறையாகும்.
  • ஊடுகதிர் (லேசர்) சிகிச்சை- இது வீக்கமடைந்த திசுக்களைக் குறிவைக்க ஊடுகதிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சையாகும். லேசர் ஹெமோர்ஹாய்டல் திசுக்களுக்கு இரத்த விநியோகத்தை துண்டிக்கிறது, இது  வீக்கத்தைக் குறைக்கிறது.

இது தவிர, அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சைகளான ரப்பர் பேண்ட் லிகேஷன் அல்லது ஸ்க்லரோதெரபி போன்றவையும் தொடக்க நிலைகளில்  மூல நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கர்ப்ப மூல நோய்க்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறதா?

கர்ப்ப காலத்தில் மூலநோய்க்கு அறுவை சிகிச்சை பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை, நிலைமை மிகவும் கடுமையானதாக இருந்தால் மற்றும் பிற சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்ற நிலைமையில், அறுவைச் சிகிச்சை மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம்.
​​​​​​​
கர்ப்ப காலத்தில் மூல நோய்க்காண அறுவை சிகிச்சையின் ஆபத்துகள் மிக அதிகம். இது அதிக இரத்தப்போக்கு, தொற்று மற்றும் முன்கூட்டிய பிரசவத்தை கூட ஏற்படுத்தும். இதன் காரணமாக, மருத்துவர்கள் பெரும்பாலும் விழிப்புடன் காத்திருப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பிரசவம் வரை நிலைமையை நிர்வகிக்க பரிந்துரைக்கின்றனர். ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், பிரசவத்திற்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் பிரச்சனை நீங்கவில்லை என்றால் அறுவை சிகிச்சை சிகிச்சை பரிசீலிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் மூல நோய் வராமல் தடுப்பது எப்படி?

கர்ப்ப காலத்தில் மூல நோயைத் தடுக்க, ஒரு பெண் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்:

  • மலச்சிக்கலைத் தடுக்கவும், மூல நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்தின் நிறைந்த பொருட்களில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளடங்கும்.
  • உடலையும் பெருங்குடலையும் நீரேற்றமாக வைத்திருக்க ஏராளமான நீராகரங்களை (தண்ணீர் மற்றும் பழச்சாறுகள்) எடுத்துக் கொள்ள வேண்டும். இது மலத்தை மென்மையாக்குகிறது மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது.
  • வழக்கமான உடற்பயிற்சி, குடல் ஒழுங்கை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். உடற்பயிற்சி மலக்குடல் பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் மூல நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கும்.
  • நீண்ட நேரம் அமர்வது அல்லது நிற்பது மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுத்தலாம் மற்றும் மூல நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். வழக்கமான இடைவெளியில் கால்களை நீட்டவும், சுற்றி செல்லவும் இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • குடல் அசைவுகளின் போது சிரமப்படுவதைத் தவிர்க்கவும், மலம் கழிக்கும் ஆசையை எதிர்க்காதீர்கள். கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போது கால்களை உயர்த்த ஸ்டூல் சாஃப்டனர் அல்லது ஃபுட் ஸ்டூலைப் பயன்படுத்தவும்.
  • எரிச்சல் மற்றும் அரிப்புகளைத் தடுக்க குதப் பகுதியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருங்கள். சோப்பு அல்லது துணிக்கு பதிலாக மென்மையான துடைப்பான்களை பயன்படுத்தவும்.

மருத்துவரின் இந்த உதவிக்குறிப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பெண்கள் மூல நோய் திசுக்கட்டிகளின் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தின் அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் ஏற்கனவே உள்ள அறிகுறிகளில் இருந்து மீளலாம்..

கர்ப்ப காலத்தில் மூல நோய் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மூல நோய் குழந்தையை பாதிக்குமா?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பைல்ஸ் குழந்தையின் ஆரோக்கியம் அல்லது வளர்ச்சியை பாதிக்கலாம் என்று பெண்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள். இருப்பினும், இதை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை.

கர்ப்ப காலத்தில் எந்த வகையான மூல நோய் கட்டிகள் பொதுவாக ஏற்படும் -- உள்புற மூல நோய் அல்லது வெளிப்புற மூல நோய்?

கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாத காலகட்டத்தில்,  உள்புற அல்லது வெளிப்புற மூல நோய் திசுக்களில் கட்டி ஏற்படும். கர்ப்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகை மூல நோய் தான் பொதுவாக உருவாகும் என்பதை உறுதிப்படுத்த தெளிவு நிறைந்த சான்றுகள் அல்லது ஆய்வுகள் எதுவும் இல்லை. பெண்களில் ஒன்று அல்லது இரண்டு வகையான கட்டிகள் சமமாக உருவாக வாய்ப்புள்ளன..

குழந்தை பேற்றுக்கு பிறகு மூல நோய் சரியாகி விடுமா?

பெரும்பாலான சூழல்களில், குழந்தை பேற்றுக்கு பிறகு, ஹார்மோன் சுரப்பதனீ அளவுகள் சீரான நிலையடைந்து, அதிகப்படியான அழுத்தம் தணிவதால், கட்டிகள் தானாக சரியாகிவிடக்கூடும்.. இருந்தாலும், சில நிலையில், பழைய நோய்நிலை நீடிக்கும், இதன் காரணத்தால் நோயாளிக்கு சிகிச்சைமுறை  தேவைப்படக்கூடும்.

மூல நோய்க்காண சிறந்த சிகிச்சை என்ன?

பொதுவாக, மூல நோய்க்காண பொருத்தமான சிகிச்சைமுறை  நோயின் நிலையை கண்டு ஆய்வறிந்த பிறகு, மருத்துவரால் தீர்மானம் செய்யப்படுகிறது. தொடக்க நிலைகளில்,, நோயாளிக்கு ஸ்க்லரோதெரபி மற்றும் ஊடுகதிர் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். கடுமை நிறைந்த நிலையில், நோயாளிக்கு ஹெமோர்ஹாய்டெக்டோமி அல்லது ஸ்டேபிள்டு ஹெமோர்ஹாய்டோபெக்ஸி பரிந்துரைக்கப்படலாம்.

பிரிஸ்டின் கேர் மருத்துவர்களுடன் எப்படி மருத்துவ ஆலோசனை பதிவு செய்து கொள்வது?

மேற்கண்ட தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவதன் மூலமாக அல்லது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தல் மூலமாக எங்கள் பிரிஸ்டின் கேர்‌ மருத்துவர்கள் உடன் ஆலோசனையே உறுதி செய்யவும்.

எங்கள் ஊழியர்கள் மருத்துவர்களின் நேர அட்டவணை பொருத்து உங்களுக்காண மருத்துவ ஆலோசனை நேரத்தை உறுதிபடத்துவார்கள்.

What Our Patients Say

  • H

    Hasan

    verified
    4/5

    Other Dr. In gurugram suggested fistula surgery but after meeting with Dr. PIYUSH the whole thing changed and he referred me for mri at last there was no fistula in mri report. I visited Dr. Piyush on same surgery day for second opinion . Thanks a lot to Dr Piyush Gulabrao k

    City : Delhi
  • SA

    Shubhanshu agarwal

    verified
    5/5

    My husband underwent surgery two days ago, and thankfully, everything went very well. We are extremely grateful to the doctor for his support, guidance, and professionalism throughout the entire process.

    City : Delhi
    Treated by : Dr. Yanshul Rathi
  • SA

    Sangeeta

    verified
    5/5

    Very carring and comfortable doctor..so kind of you sir... thank you so much sir..

    City : Chennai
  • RN

    RAHAMATH NISHA

    verified
    4/5

    Dr. Rajesh Gandhi is a highly skilled specialist, but the clinic's management needs improvement. I had to wait a very long time past my appointment time while dealing with severe piles pain, which was highly uncomfortable. While the doctor's treatment was effective, the facility must find a way to prioritize patients in acute distress

    City : Madurai
    Treated by : Dr. Rajesh Gandhi
  • S

    Sreenivas

    verified
    5/5

    Explained me how to take care of myself

    City : Coimbatore
    Treated by : Dr. Sathya Deepa
  • DS

    Darayus Sam Bharucha

    verified
    5/5

    hearing Patient problems.... Good Guy

    City : Mumbai

மூலவியாதி சிறந்த நகரங்களில் அறுவை சிகிச்சை செலவு

expand icon